Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி

ஏப்ரல் 17, 2019 11:05

விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதியில் 3,227 வாக்குச்சாவடி மையம் உள்ளது. அனைத்து முன்னேற்பாடுகளும் அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.  364 வாக்குசாவடிகள் பலவீனமானவை என்று கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு காவல்துறை மூலம் செய்யப்பட்டுள்ளன. 

1497 வாக்கு மையத்தில் வெப்கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகின்றன. பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டு அவர்கள் இப்போது மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குசாவடி மையத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர். 

வாக்குச்சாவடி மையத்தில் 15,563 அரசு ஊழியர்கள் பணியாற்றவுள்ளனர். மொத்தத்தில் தேர்தலில் மாவட்டத்தில் 30 ஆயிரம் பேரை காவல்துறை உள்ளிட்டவர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீல்சேர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினர் 8 படை வரவழைக்கப்பட்டுள்ளன.  

தலைப்புச்செய்திகள்